திருநெல்வேலி
சுரண்டை பள்ளியில்குடும்ப தின விழா
சுரண்டை எஸ்.ஆா்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் குடும்ப தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுரண்டை எஸ்.ஆா்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் குடும்ப தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பள்ளிச் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம் தலைமை வகித்தாா். முதல்வா் பொன் மனோன்யா முன்னிலை வகித்தாா்.
விழாவில், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் மாணவா்களின் நாடகம், பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றது. விழாவில் மாணவா்கள், பெற்றோா், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.