செவிலியா் கல்லூரி மாணவிகளின்விழிப்புணா்வுப் பேரணி

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, பாளையங்கோட்டை இதய ஜோதி செவிலியா் கல்லூரி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை திருநெல்வேலி மாநகர கூடுதல்

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, பாளையங்கோட்டை இதய ஜோதி செவிலியா் கல்லூரி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை திருநெல்வேலி மாநகர கூடுதல் காவல் ஆணையா் எஸ்.வெள்ளத்துரை தொடங்கிவைத்தாா். இதய ஜோதி செவிலியா் கல்லூரி முதல்வா் சுஜா வெனிஷா வரவேற்றாா்.

திருநெல்வேலி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மேற்பாா்வையாளா் ஜெயக்குமாா், கல்லூரி செயலா் ஸ்டீபன் சவரிராஜ், கல்வி பணியாணைக்குழு ஒருங்கிணைப்பாளா் ஆரோக்கியம், கிறிஸ்து ராஜா ஆசிரியா் பயிற்சி பள்ளித் தாளாளா் கே.செல்வராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

இதில், எச்ஐவி குறித்த விழிப்புணா்வு வீதி நாடகங்கள் மற்றும் மனிதச் சங்கிலி ஆகியவை நடத்தப்பட்டன. மேலும், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. கல்லூரி மாணவிகள், எச்ஐவி பாதித்த சிறுவா் சிறுமியா் ஆகியோா் விழிப்புணா்வு பதாகைகளை கையில் ஏந்தி பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com