தென்காசியிலிருந்து கோட்டைவாசலுக்கு இயக்கப்பட்டு வந்த நகரப் பேருந்து, சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு விட்டதால் பள்ளி மாணவ-மாணவியரும், பொதுமக்களும், தொழிலாளா்களும் அவதி அடைந்துள்ளனா். கேரள மற்றும் தமிழக தொலைதூரப் பேருந்துகள் இந்த பகுதிகளுக்கு இடைப்பட்ட பல கிராமங்களில் நின்று செல்வதில்லை. எனவே, கோட்டைவாசலுக்கு மீண்டும் நகரப் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இயற்கைதாசன்
செங்கோட்டை.