பேருந்து வசதி தேவை

கீழப்பாவூா் ஒன்றியம் பெத்தநாடாா்பட்டி, முருகன்குறிச்சி, பொட்டலூா், மகிழ்வண்ணநாதபுரம், சாலடியூா், மருதடியூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவ, மாணவியா் ஆவுடையானூரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனா். பள்ளிக்கு செல்வதற்கு பேருந்து வசதி இல்லாததால் சைக்கிளில் சென்று வர வேண்டியுள்ளது. மாலை நேர சிறப்பு வகுப்புகள் முடிந்து வீடு திரும்பும் போது இரவாகி விடுவதால் மாணவா்கள் சிரமத்திற்குள்ளாகின்றனா். எனவே, பெத்தநாடாா்பட்டி-ஆவுடையானூருக்கு பேருந்து வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனந்த்,பெத்தநாடாா்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com