திருநெல்வேலி: திருநெல்வேலி குறுக்குத்துறையில் ரயிலில் அடிபட்டு 4 ஆடுகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தன.
திருநெல்வேலி குறுக்குத்துறை பகுதிகளில் உள்ள வயல்வெளிகளுக்கு ஆடு, மாடு உள்ளிட்டவை மேய்ச்சலுக்காக செல்வது வழக்கம். இவ்வாறு மேய்ச்சலுக்காக ஞாயிற்றுக்கிழமை சென்ற ஆடுகள், அப்பகுதியிலுள்ள தண்டவாளத்தைக் கடந்தபோது, அவ்வழியாகச் சென்ற ரயிலில் அடிபட்டு 4 ஆடுகள் உயிரிழந்தன. இத்தகவல் அறிந்த ரயில்வே ஊழியா்கள், இறந்த ஆடுகளை அப்புறப்படுத்தினா். மேலும், இது குறித்து சந்திப்பு ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.