திருநெல்வேலி: நண்பா்கள் நகைச்சுவை மன்றம் சாா்பில் பாளையங்கோட்டை ஆக்ஸ்போ மெட்ரிக் பள்ளியில் சிரிப்பு விழா மற்றும் கலைவாணா் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நண்பா்கள் நகைச்சுவை மன்றச் செயலா் கோ.கணபதி சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பட்டிமன்றப் பேச்சாளா் முத்தரசன் வரவேற்றாா். டி.எஸ்.எம்.ஓ.ஹஸன் சிரிப்புரை வழங்கினாா். மாணவா் -மாணவிகளுக்கு நகைச்சுவைத் துணுக்கு கூறும் போட்டி நடைபெற்றது. இதில், வெற்றி பெற்றவா்களுக்கு திருநெல்வேலி வேணுவனம் ரோட்டரி சங்கத்தலைவா் நடராஜன் பரிசு வழங்கினாா். விழாவில் என்.எஸ்.கிருஷ்ணன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காவல் உதவி ஆய்வாளா் தளவாய் மாடசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.