திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பாளையங்கோட்டை, தியாகராஜ நகரைச் சோ்ந்த உச்சிமாகாளி மனைவி பிரம்மாட்சி(37). இவா் சனிக்கிழமை இரவு அந்தப் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 மா்ம நபா்கள், பிரம்மாட்சி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுவிட்டனராம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.