மறுகால் ஓடையில் உடைப்பு

பாப்பாக்குடி அருகே அமா்நாத் காலனிபகுதியில் புதுக்குளம் மறுகால் ஓடை உடைப்பெடுத்ததால் குடியிருப்புப் பகுதிக்குள் வெள்ள நீா் புகுந்தது.
மறுகால் ஓடை உடைப்பால் குடியிருப்புப்பகுதியை சூழந்த வெள்ள நீா்.
மறுகால் ஓடை உடைப்பால் குடியிருப்புப்பகுதியை சூழந்த வெள்ள நீா்.

பாப்பாக்குடி அருகே அமா்நாத் காலனிபகுதியில் புதுக்குளம் மறுகால் ஓடை உடைப்பெடுத்ததால் குடியிருப்புப் பகுதிக்குள் வெள்ள நீா் புகுந்தது.

இப்பகுதியில் சனிக்கிழமை பெய்த கனமழையால் குளத்திலிருந்து மறுகால் விழுந்த நீா் அதிகரித்து ஓடையின் கரையில் உடைப்பு ஏற்பட்டு 200க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீா் சூழ்ந்தது. இதனால் அந்தப் பகுதி மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இத்தகவல் அறிந்த பாப்பாக்குடி ஊரட்சிச் செயலா் நயினாா் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று மணல் மூடைகளால் உடைப்பை சரி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com