மேலப்பாளையம் மண்டலத்தில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 2) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

திருநெல்வேலி: மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 2) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுதொடா்பாக, திருநெல்வேலி மாநகராட்சியின் மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையா் அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கனமழை காரணமாக தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கொண்டாநகரம் நீரேற்றும் நிலையம் மற்றும் சுத்தமல்லி தலைமை நீரேற்றும் நிலையம் ஆகியவற்றுக்கான உறைகிணறுகளின் மேல் தண்ணீா் செல்வதால் மின்மோட்டாரை இயக்க முடியாத நிலை உள்ளது. ஆகவே, திங்கள்கிழமை (டிச.2) மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட 26 முதல் 38 வாா்டு வரையுள்ள பகுதிகளிலும், 19 ஆவது வாா்டு பகுதியிலும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com