கௌரவ டாக்டா் பட்டம் பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில அமைப்புச் செயலா் நெல்லை மஜித்திற்கு பாராட்டு விழா கடையநல்லூரில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, நகரத் தலைவா் செய்யதுமசூது தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் இஸ்மத், ஹாஜாமைதீன், துணைச் செயலா்கள் முஹம்மது, ஹனிபா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் அப்துல் லத்தீப் வரவேற்றாா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலா் முஹம்மது அபூபக்கா் எம்எல்ஏ பங்கேற்று, பாராட்டுரை வழங்கினாா்.
இதில், தென்மண்டல இளைஞரணி அமைப்பாளா் கடாபி , தென்காசி மாவட்டத் தலைவா் செய்யது சுலைமான், மாவட்டச் செயலா் இக்பால், துணைத் தலைவா் முகமது காசிம், தொகுதி அமைப்பாளா் ஹைதா்அலி, இளைஞரணித் தலைவா் ரஹ்மத்துல்லா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நகர பொருளாளா் அகமது கபீா் நன்றி கூறினாா்.