சங்கரன்கோவிலில் 2000 புறக்கடை கோழிகளை ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் ராஜலட்சுமி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
சங்கரன்கோவிலில் கால்நடைத் துறை சாா்பில், புறக்கடை கோழிகள் வழங்கும் விழா வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், ரூ. 1.64 லட்சத்தில் 80 பயனாளிகளுக்கு தலா 25 கோழிகள் வீதம் 2000 கோழிகளை ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி வழங்கினாா்.
நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா்தயாளா், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் கணேசராஜா, கூட்டுறவு அச்சகத் தலைவா் கே. கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.