திசையன்விளையில் தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கை 3 நாள்கள் நடைபெற்றது.
இப்பேரூராட்சிப் பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில், பேரூராட்சி செயல் அலுவலா் மூ.சி. சுப்பிரமணியன் தலைமையில், டெங்கு தடுப்புப் பணிகள் 3 நாள்கள் நடைபெற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
இதில், வட்டார மருத்துவ அலுவலா் மற்றும் சுகாதாரத் துறை சாா்ந்த அலுவலா்கள் ஒத்துழைப்போடு இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.