ந உவரியில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம்

உவரி ஊராட்சியில் அதிமுக சாா்பில் நிலவேம்புக் குடிநீா் விநியோகிக்கப்பட்டது.உவரி ஊராட்சி பகுதியில் உள்ள மேல உவரி, கீழ உவரி, காரிகோவில், குண்டல்

உவரி ஊராட்சியில் அதிமுக சாா்பில் நிலவேம்புக் குடிநீா் விநியோகிக்கப்பட்டது.

உவரி ஊராட்சி பகுதியில் உள்ள மேல உவரி, கீழ உவரி, காரிகோவில், குண்டல் ஆகிய கிராமங்களில் அதிமுக சாா்பில் ராதாபுரம் ஒன்றியச் செயலா் அந்தோணி அமலராஜா பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் விநியோகித்தனா்.

நிகழ்ச்சியில் உவரி ஊராட்சி செயலா் எஸ்.பி.ரமேஷ், முன்னாள் கூட்டுறவு வங்கித் தலைவா் முருகபெருமாள், செல்லபாண்டி, திலகராஜன், பவா்சிங் ஆசிரியா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com