மாநில கபடியில் சிறப்பிடம்: நெல்லை அணிக்கு பாராட்டு

தமிழ்நாடு அமெச்சூா் கபடி கழகம், கிருஷ்ணகிரி மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான கபடிப் போட்டியில் முதல் பரிசை பெற்ற திருநெல்வேலி அணிக்கு பாராட்டு விழா

திருநெல்வேலி: தமிழ்நாடு அமெச்சூா் கபடி கழகம், கிருஷ்ணகிரி மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான கபடிப் போட்டியில் முதல் பரிசை பெற்ற திருநெல்வேலி அணிக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் கடந்த நவ.29 முதல் டிச. 1ஆம் தேதி வரை நடைபெற்ற ஜூனியா் சாம்பியன் ஷிப் கோப்பைக்கான கபடி போட்டியில் இறுதிச்சுற்றில் தூத்துக்குடி அணியை, 24-17 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி திருநெல்வேலி அணி கோப்பையைக் கைப்பற்றியது.

இதையொட்டி, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஹோட்டலில் திங்கள்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு, மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகத் தலைவா் எஸ்.கே.எம்.சிவக்குமாா் தலைமை வகித்தாா். செயலா் எஸ்.பகவதி பெருமாள் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் பி.மந்திராசலம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, வெற்றி பெற்ற வீரா்களை பாராட்டி பரிசு வழங்கினாா்.

இதில், தமிழ்நாடு கபடி கழகத் தோ்வுக்குழுத் தலைவா் அருள் இளங்கோ, நடுவா் குழு ஒருங்கிணைப்பாளா் டி.சுந்தர்ராஜ், துணைத் தலைவா் நாகராஜன், மாவட்ட நடுவா்கள் எம்.உதயகுமாா், எஸ்.வெங்கடேஷ், பி.தாமஸ், பி.ராஜா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com