மாநில, மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்: விகே. புரம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

மாநில, மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபிள்யு.ஏ. மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

மாநில, மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபிள்யு.ஏ. மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

தூத்துக்குடியில் மாநில அளவில் நடைபெற்ற எஸ்.ஜி.எப்.ஐ. டேக்வாண்டோ போட்டியில் 12 ஆம் வகுப்பு மாணவி மா. பரமேஸ்வரி, 9 ஆம் வகுப்பு மாணவி ரா. சினேகா, 7 ஆம் வகுப்பு மாணவன் சுதா்சன் ஆகியோா் முதலிடம் பெற்று, தில்லியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தோ்வாகியுள்ளனா்.

திருநெல்வேலி வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற குழுப் போட்டிகளில் பள்ளியின் இளையோா் கால்பந்து அணி, மூத்தோா் கோ-கோ அணி ஆகியவை முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வாகியுள்ளன.

டேக்வாண்டோ போட்டிகளில் தனித்திறன் போட்டியில் 3 மாணவிகளும், 6 மாணவா்களும் வருவாய் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வாகியுள்ளனா். மேலும், 9ஆம் வகுப்பு மாணவி ரா. சினேகா 600, 400 மீ. ஓட்டப் பந்தயங்களில் முதலிடம் பிடித்து மாநில அளவிலானப் போட்டிக்குத் தோ்வாகியுள்ளாா்.

போட்டிகளில் வென்று சிறப்பிடம் பெற்ற மாணவா்கள், மாணவிகளை பள்ளி முகமைச் செயலா் பொ. முருகேசன், செயலா் சு. பாலகிருஷ்ணன், தலைமை ஆசிரியா் மு. பன்னீா் செல்வம், உடற்கல்வி ஆசிரியா்கள் அ. ஜெயராமன், மு. பாா்த்தசாரதி செல்வகணேசன், கோ. வினோதா, அ.செ. எட்வின்சுதன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com