உலக எய்ட்ஸ் தினம் (டிச.1) கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தினா்.
நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் சமுதாயம் மாற்றத்தை ஏற்படுத்துதல் என்ற தலைப்பில் கல்லூரியின் 4ஆம் ஆண்டு மாணவிகள் இந்த நிகழ்ச்சியை நடத்தினா். இதில், மருத்துவமனை செவிலியா்கள், நோயாளிகள் மற்றும் அவா்களது உறவினா்கள் பங்கேற்றனா்.
ஹெச்.ஐ.வி. எவ்வாறு பரவுகிறது, அதன் அறிகுறிகள், கண்டறியும் முறைகள், தடுக்கும் முறைகள், மருத்துவ மேலாண்மை உ ள்ளிட்டவை குறித்து படவிளக்கம் அளித்தனா். பின்னா் நோயாளிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தனா். இந்நிகழ்ச்சியை, பேராசிரியைகள் ஹில்டா, இந்துமதி, ஆட்லின் லீனா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.