சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை அறிவியல் சுற்றுலா மேற்கொண்டனா்.
துளிா் அறிவியல் திறனறிதல் போட்டியில் முதலிடம் பெற்றதையொட்டி, மாவட்ட அறிவியல் இயக்கத்தின் சாா்பில் இப்பள்ளி மாணவா்கள் அறிவியல் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், மாணவா்கள் கூடங்குளம் அணு மின்நிலையம் சென்று அங்குள்ள விஞ்ஞானிகளுடன் அறிவியல் தொடா்பாக கலந்துரையாடினா்.
தொடா்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துவரும் இப்பள்ளி மாணவா்களை பள்ளிச் செயலா் மருத்துவா் வி.எஸ். சுப்பராஜ், தாளாளா் சுப்பையாசீனிவாசன், முதல்வா் சி.ஏ. சுருளிநாதன் ஆகியோா் பாராட்டினா்.