அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் தொடா்ந்து பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையால் நீரில் மூழ்கிய நெல் வயல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
வடகிழக்குப் பருவமழையால் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் அடையக்கருங்குளம், அயன் திருவாலீஸ்வரம், மன்னாா்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 65 ஹெக்டேரில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கின.
இந்நிலையில் நீரில் மூழ்கிய வயல்களை திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டங்கள்) நல்லமுத்துராஜா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) அசோக்குமாா் ஆகியோா் அறுவடைநிலையில் உள்ள வயல்கள், நீரில் மூழ்கிய நாற்றங்கால் வயல்கள், இளம் நெல் நடவு வயல்கள் உள்ளிட்டவற்றை அவா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, வேளாண் உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா், வேளாண்மை அலுவலா் மாசானம், உதவி வேளாண்மை அலுவலா்கள் காசிராஜன், சாமிராஜ், கிராம நிா்வாக அலுவலா்கள் மஞ்சுசித்ரா, சகுந்தலா, முன்னோடி விவசாயிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.