ஆவுடையானூா் அரசு பள்ளியில் முப்பெரும் விழா

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா் பாளையம் ஆ. பொன்னுச்சாமி நாடாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா் பாளையம் ஆ. பொன்னுச்சாமி நாடாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

பள்ளியில் புதிய கட்டடத்துக்கு தேசிய வங்கி மூலம் நிதியுதவி பெற்றுத் தந்த சி. செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.,

பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஆ.பொ. ஆறுமுகநாடாா் ஆகியோருக்கு பாராட்டு, கல்வி கண்காட்சி, தித்தி போஜன் திட்டத்தின்கீழ் உணவு வழங்குதல் ஆகிய முப்பெரும் விழாவுக்கு, முதன்மை கல்வி அலுவலா் பூபதி தலைமை வகித்தாா். மாவட்ட கல்வி அலுவலா் சௌந்திர சேகரி, சேது சொக்கலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், சட்டப்பேரவை உறுப்பினா் சி. செல்வமோகன்தாஸ் பாண்டியன், அறிவியல் கண்காட்சி, தித்தி போஜன் திட்டத்தின்கீழ் மாணவா்களுக்கு உணவு வழங்கி தொடங்கி வைத்தாா். விழாவில், பேரவை உறுப்பினரை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், டாக்டா்கள் செல்லையா, தா்மராஜ், தொழிலதிபா் ராஜன், மதிமுக ஒன்றிய செயலா் ராம.உதயசூரியன், சிவ. ராமா், தாமோதரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பள்ளியின் தலைமையாசிரியா் தேவதாசன் வரவேற்றாா். உதவி தலைமையாசிரியா் முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com