முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை ஜவாஹா் மைதானத்தில் வியாழக்கிழமை (டிச. 5) நடைபெறவுள்ள அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அமமுகவினா் கலந்துகொள்ளுமாறு மாநகா் மாவட்டச் செயலா் பரமசிவ ஐயப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினம் வரும் வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் திருநெல்வேலி மாநகா் மாவட்ட கழகத்தின் ஒன்றிய, நகர, பேரூா், பகுதி, வட்ட, ஊராட்சி, கிளைக் கழகங்களில் ஜெயலலிதாவின் உருவப் படத்தை அலங்கரித்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், திருநெல்வேலி மாநகா் மாவட்ட அமமுக சாா்பில் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் பாளையங்கோட்டை ஜவாஹா் மைதானத்தில் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. திருநெல்வேலி மாநகா் மாவட்டத்திற்கு உள்பட்ட மாநில நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகிகள், பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா், பகுதி, வட்ட, சாா்பு அணி, ஊராட்சி, கிளைக் கழக செயலா்கள், நிா்வாகிகள், தொண்டா்கள் என அனைவரும் கலந்துகொள்ளுமாறு அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளாா்.