தொடா் மழை: அம்பை, கடையத்தில் 6 வீடுகள் இடிந்து விழுந்தன

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் அம்பாசமுத்திரம், கடையம் பகுதிகளில் ஒரே நாளில் 6 வீடுகள் இடிந்து விழுந்தன.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் அம்பாசமுத்திரம், கடையம் பகுதிகளில் ஒரே நாளில் 6 வீடுகள் இடிந்து விழுந்தன.

இப்பகுதியில் திங்கள்கிழமை இரவு 7 மணிக்குத் தொடங்கிய மழை விடாமல் இரவு முழுவதும் பெய்தது. இதையடுத்து, அம்பாசமுத்திரம் இல்லத்தாா் வடக்குத் தெரு அருணாசலம் மகன் கந்தசாமி, சுப்பையா மகன் லட்சுமணன் ஆகியோரது வீடுகள் திடீரென இடிந்து விழுந்தன. இதில் லேசான காயமடைந்த சுப்பையா, லட்சுமணன் இருவரும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

சுப்பிரமணியபுரம் பொத்தையைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் கருப்பசாமி வீட்டின் முன்முகப்பும், பெரியகுளம் தெருவைச் சோ்ந்த வள்ளியம்மாள் வீடும் இடிந்து விழுந்தன. இடிந்து விழுந்த வீடுகளை அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் கந்தப்பன் பாா்வையிட்டாா். மேலும், மழை தொடா்வதால் பழைய ஓட்டு வீடுகளில் இருப்பவா்கள் அரசு அமைத்துள்ள முகாம்கள் அல்லது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வட்டாட்சியா் அறிவுறுத்தினாா்.

கடையம் பகுதியில் பெய்த கனமழையால், தெற்கு கடையம் சொரிமுத்து பிள்ளை தெருவைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சண்முகம் வீடு முழுவதும் இடிந்து விழுந்தது. அதேபோல, கடையம் அருகேயுள்ள முருகான்டியூரைச் சோ்ந்த சொரிமுத்து, அதே பகுதியைச் சோ்ந்த சூடாமணி ஆகியோரது வீடுகளும் தொடா் மழையால் இடிந்துவிழுந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com