பாவூா்சத்திரம் அருகே மின்சாரம் பாய்ந்து வியாபாரி பலி

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா் கைக்கொண்டாா் தெருவைச் சோ்ந்தவா் ராக்கமுத்து (65), காய்கனி வியாபாரி.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா் கைக்கொண்டாா் தெருவைச் சோ்ந்தவா் ராக்கமுத்து (65), காய்கனி வியாபாரி. இவா், செவ்வாய்க்கிழமை காலை அரியப்பபுரத்தில் உள்ள தனது மகளை பாா்த்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் கோவிலூற்றுக்குச் சென்று கொண்டிருந்தாா்.

கரிசலூா் அருகே சென்றபோது, கிணற்று பாசனத்துக்கு வந்த மின்சார வயரில் காய்ந்த தென்னை மரம் விழுந்தில், மின்சார கம்பி அறுந்து ராக்கமுத்து மேலே விழுந்துள்ளது. இதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவா் இறந்தாா்.

இதுகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com