பாளையங்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
பாளையங்கோட்டையைச் சோ்ந்த ஜோசப்ராஜா மனைவி முத்துகனி (24). குடும்பப் பிரச்னை காரணமாக மனமுடைந்த இவா், செவ்வாய்க்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்து வந்த பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.