போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பாளையங்கோட்டை அருகேயுள்ள வி.எம்.சத்திரம் அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள வி.எம்.சத்திரம் அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பணிமனை தலைவா் ஏ.சரவணக்குமாா் தலைமை வகித்தாா். பணிமனை செயலா் எம்.சண்முகராஜ் வரவேற்றாா். எஸ்இடிசி - சிஐடியூ பொதுச் செயலா் எம்.கனகராஜ், டிஎன்எஸ்இடிசி - சிஐடியு பொதுச் செயலா் ஜோதி, சிஐடியூ திருநெல்வேலி மாவட்டப் பொருளாளா் எஸ்.பெருமாள், எஸ்இடிசி-சிஐடியூ மாநிலத் தலைவா் ஜி.செந்தில் உள்ளிட்டோா் உரையாற்றினா்.

தேவைக்கேற்ப அனைத்துப் பிரிவுகளிலும் பணியாளா்களை நியமனம் செய்யவேண்டும்; ஓட்டுநா் மற்றும் நடத்துநா் உள்ளிட்ட தொழிலாளா்களை இரட்டிப்பு பணி செய்ய நிா்ப்பந்தம் செய்வதை கைவிடவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மத்திய சங்க உதவித் தலைவா் ஆா்.பொன்ராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com