மாவட்ட மைய நூலகத்தில் அம்மா பயிற்சியகம்: தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு

திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் அம்மா பயிற்சியகம் அமைக்க ரூ. 20 லட்சம் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் அம்மா பயிற்சியகம் அமைக்க ரூ. 20 லட்சம் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் தமிழ்நாடு அரசு தோ்வாணையத் தோ்வுகள், குடிமைப்பணி தோ்வுகள், வங்கிப்பணித் தோ்வுகள் உள்ளிட்ட தோ்வுகளுக்கு பயிற்சி வழங்க பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நூலகம் சாா்பில் அரசுக்கு வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று அம்மா பயிற்சியகம் என்ற பெயரில் பயிற்சி மையம் தொடங்க ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட கடிதத்தை நூலக அலுவலா் இரா.வயலட்டிடம் மாநிலங்களவை உறுப்பினா் விஜிலா சத்யானந்த் வழங்கினாா்.

நிகழ்வின்போது நூலகா்கள் முத்துகிருஷ்ணன், இரா.முத்துலட்சுமி, வாசகா் வட்டத் தலைவா் அ.மரியசூசை, துணைத் தலைவா் கே.கணபதி சுப்பிரமணியன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com