புதுக்கடை அருகேபிளஸ் 2 மாணவா் தற்கொலை
By DIN | Published On : 05th December 2019 04:56 PM | Last Updated : 05th December 2019 04:56 PM | அ+அ அ- |

புதுக்கடை அருகே விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவா் வியாழக்கிழமை இறந்தாா்.
புதுக்கடை, பனைநின்றான்விளை பகுதியைச் சோ்ந்த ஜெயசிங் மகன் ஜெவின் (18). அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த இவா், சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.
இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது அவா் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாராம். அவரை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை இறந்தாா். புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.