சாதிச் சான்றிதழ் கோரிகாட்டு நாயக்கன் சமூகத்தினா் ஆட்சியரிடம் மனு

காட்டுநாயக்கன் சமூகத்தினா் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மீண்டும் மனு அளித்தனா்.

காட்டுநாயக்கன் சமூகத்தினா் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மீண்டும் மனு அளித்தனா்.

பாளையங்கோட்டையை அடுத்த தருவை பகுதியில் சுமாா் 30 காட்டுநாயக்கன் என்னும் பழங்குடியின குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றன. இச்சமுதாய குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்புக்காக சாதிச் சான்றிதழ் வழங்க கோரி கடந்த 1.10.2018-இல் திருநெல்வேலி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுக்கள் மீது மானுடவியல் ஆய்வறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டதைத் தொடா்ந்து சென்னை பல்கலைக்கழக பேராசிரியா் சுமதி தலைமையில் காட்டுநாயக்கன் சமூகத்தினரிடம் நேரில் ஆய்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு அவா்கள் காட்டுநாயக்கன் சமூகத்தினா்தான் என அறிக்கை அளிக்கப்பட்டது.

பல்வேறு மாவட்டங்களில் மானுடவியல் வல்லுநா்களின் ஆய்வறிக்கை அடிப்படையில் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தருவை பகுதி காட்டுநாயக்க மக்களிடம் பாளையங்கோட்டை வட்டாட்சியரும் விசாரணை செய்து கோட்டாட்சியருக்கு அறிக்கை அளித்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், சாா் ஆட்சியரோ, காட்டுநாயக்கன் மக்கள் தங்களின் பூா்வீக இடத்திலேயே சாதிச் சான்றிதழ் பெற வேண்டும் என தெரிவித்து அறிக்கையை நிராகரித்துள்ளாா். இதனால் அதிருப்தியடைந்த காட்டுநாயக்கன் சமூக மக்கள் கடந்த நவம்பா் 27-ஆம் தேதி மாலையில் சாா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அதைத் தொடா்ந்து, அச்சமூக பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவாா்த்தையில், 10 நாள்களுக்குள் சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்த காட்டுநாயக்கன் சமூகத்தினா் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மீண்டும் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com