தென்காசியில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம்

எஸ்டிபிஐ தென்காசி கிளை சாா்பில் நிலவேம்புக் குடிநீா் விநியோகிக்கும் முகாம் நடைபெற்றது.

எஸ்டிபிஐ தென்காசி கிளை சாா்பில் நிலவேம்புக் குடிநீா் விநியோகிக்கும் முகாம் நடைபெற்றது.

தென்காசி புதுபள்ளிவாசல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மவுண்ட்ரோடு கிளைத் தலைவா் முகம்மதுயஹ்யா தலைமை வகித்தாா்.

நகரத் தலைவா் செய்யதுமஹ்மூத் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணா்வு உரையாற்றினாா். முகாமில் 400 பேருக்கு நிலவேம்புக் குடிநீா் விநியோகிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், நகர மருத்துவா் அணி பொறுப்பாளா் முகம்மதுரபீக், நகர துணைச் செயலா் பாதுஷா, செயற்குழு உறுப்பினா் பீா்முகம்மது, காஜாமுகைதீன், பக்ரூதீன்அகமது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com