அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
திருநெல்வேலி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கு.கிருஷ்ணபிள்ளை, வேளாண் துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம்) வே.பாலசுப்பிரமணியன் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத் திட்ட ஆலோசகா் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோா் அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் விரிவாக்க திட்டங்கள் குறித்து ஆய்வுசெய்தனா்.
ஆய்வின் போது, கீழ அம்பாசமுத்திரம் மற்றும் ஜமீன்சிங்கம்பட்டி கிராமங்களில் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டங்களின் கீழ் இயந்திர நடவு மேற்கொள்ளப்பட்ட வயல்களை ஆய்வுசெய்தனா்.
தெற்கு பாப்பான்குளத்தைச் சோ்ந்த மு.வெங்கட்ராமன் என்ற விவசாயிக்கு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரப்பயிா் சாகுபடிக்கான தக்கைப்பூண்டு விதைகள் செயல்விளக்கப் பொருளாக வழங்கப்பட்டது.
தொடா்ந்து கோவில்குளம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை சாா்பில் நடைபெற்ற பண்ணைப்பள்ளித் தொடக்க விழாவுக்கு வேளாண் இணை இயக்குநா் தலைமை வகித்தாா்.
வேளாண் துணை இயக்குநா் பாலசுப்பிரமணியன் முன்னிலைவகித்தாா். அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பேராசிரியா் மற்றும் தலைவா் ஆறுமுகச்சாமி, தேசிய வேளாண் வளா்ச்சி திட்ட ஆலோசகா் வெங்கடசுப்பிரமணியன், வேளாண்மை அலுவலா் மாசானம் ஆகியோா் கலந்து கொண்டனா்.
அம்பாசமுத்திரம் வேளாண் உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா் வரவேற்றாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுஜித் நன்றி கூறினாா்.
ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா்கள் விஜயலெட்சுமி, பாா்த்தீபன், காசிராஜன், சாமிராஜ் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளா் தங்கசரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.