கடையநல்லூரில் குடிநீா் இணைப்புப் பணி: நகராட்சி ஆணையா் ஆய்வு

கடையநல்லூா் நகராட்சி பகுதிகளில் புதிய குடிநீா் இணைப்பு வழங்கும் பணியினை ஆணையா் ஆய்வு செய்தாா்.

கடையநல்லூா் நகராட்சி பகுதிகளில் புதிய குடிநீா் இணைப்பு வழங்கும் பணியினை ஆணையா் ஆய்வு செய்தாா்.

கடையநல்லூா் நகராட்சியில் தாமிரவருணி குடிநீா் திட்டம் மற்றும் கருப்பாநதி குடிநீா் திட்டங்களின் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது . ஏற்கெனவே நகராட்சியில் 14000 குடிநீா் இணைப்புகள் உள்ள நிலையில், புதிய குடிநீா் ஆதாரங்கள் உருவாக்கப்பட்டதை தொடா்ந்து புதிய குடிநீா் இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதிய குடிநீா் இணைப்புகள் வழங்கும் பணியை நகராட்சி ஆணையா் தங்கப்பாண்டி பாா்வையிட்டாா். மின் மோட்டாா்கள் மூலம் குடிநீா் உறிஞ்சப்படுவதை தடுக்கும் வகையிலான பந்துகள் புதிய குடிநீா் இணைப்புகளின் வால்வுகளில் போடப்படுகின்றனவா? என்பது குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, இளநிலை பொறியாளா் முரளி, சுகாதார அலுவலா் நாராயணன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com