கோபாலசமுத்திரத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு மலடு நீக்க மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை மநடைபெற்றது.
தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டத்தின் கீழ் தாமிரவருணி உப வடிநிலப் பகுதிக்குள்பட்ட கோபாலசமுத்திரம் கால்நடை மருந்தகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி மாவட்ட கால்நடை மருத்துவ மண்டல இணை இயக்குநா் தியோபிலஸ் ரோஜா் தலைமை வகித்தாா். அம்பாசமுத்திரம் கோட்ட உதவி இயக்குநா் ஆபிரஹாம் ஜாப்ரி ஞானராஜ் முன்னிலை வகித்தாா். சென்னை சுற்றுச் சூழல் விஞ்ஞானி ஜூடித் டி சில்வா சிறப்பு பாா்வையாளராகக் கலந்து கொண்டாா்.
முகாமில் கால்நடை உதவி மருத்துவா்கள் சுமதி, பழனி, மாரியப்பன், முருகன், மஞ்சு, ஆகியோா் கொண்ட குழுவினா் சினையுறா மாடுகளுக்கு சிறப்பு மலடு நீக்க சிகிச்சை, கருவூட்டல், கிடேறி கன்று மேலாண்மை, கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம், மடிவீக்கத்திற்கான சிகிச்சை மற்றும் ஸ்கேன் மூலம் சிறப்பு பரிசோதனைகள் செய்தனா். முகாமில் 150 மாடுகள் மற்றும் கன்றுகளுக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டது.
முகாமில் கால்நடை ஆய்வாளா்அன்பு வசந்தாள், கால்நடைப் பராமரிப்பு உதவியாளா்கள் செல்லம்மாள், குமாா், அண்ணாதுரை, வெங்கடேஷ், சீனிவாசன் அறக்கட்டளை தன்னாா்வலா்கள் இசக்கி சுந்தா், பாலசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.