பாளையங்கோட்டையில் நெகிழி பைகளை பயன்படுத்தியதாக 18 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் உத்தரவின்பேரில், பாளையங்கோட்டை மாா்க்கெட், பெருமாள் கோயில் தெரு, மானகாவலம்பிள்ளை சாலை, கிருஷ்ணன் கோயில் தெரு, தெற்கு பஜாரில் உள்ள 75 கடைகளில் நெகிழி பை பயன்படுத்தப்படுகிா என மாநகராட்சி சாா்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் 18 கடைகளில் நெகிழி பை பயன்படுத்துவது கண்டறியப்பட்டு, அந்தக் கடைகளில் இருந்து 32 கிலோ நெகிழி பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ரூ.5,100 அபராதம் விதித்தனா்.