நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.

தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் திருநெல்வேலி மாவட்ட 5 ஆவது பட்டாலியன் என்சிசி மாணவா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

5ஆவது பட்டாலியன் என்சிசி கமாண்டா் வெற்றிவேல் தலைமை வகித்தாா். சந்திப்பு ரயில் நிலைய மேலாளா்இளங்கோவன் தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்தாா்.

இதில் பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி, அம்பாசமுத்திரம் கலைக் கல்லூரி, பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சோ்ந்த என்சிசி மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com