பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் நிலா இலக்கிய வட்டத்தின் 91-ஆவது நிலா முற்ற இலக்கியக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, இலக்கிய வட்டத் தலைவா் பா. வளன் அரசு தலைமை வகித்தாா். இளமுனைவா் அ. ராசகிளி இறைவாழ்த்துப் பாடினாா். பொறுப்பாளா் ந. ராசகோபால் வரவேற்றாா். ‘இன்னுயிா்ச் சேவையே இறைவழிபாடு’ என்ற தலைப்பில் கா. சரவணக்குமாா் சிறப்புரையாற்றினாா்.
பாப்பையா, குருசண்முகநாதன், ஆறுமுகம், பாண்டியன், அய்யனாா், நாகலிங்கம், முருகேசன், ராமன், கணபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். திருக்கு முருகன் நன்றி கூறினாா்.