8 வட்டங்களில் நாளை மறுநாள் அம்மா திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் வெள்ளிக்கிழமை (பிப். 15) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் வெள்ளிக்கிழமை (பிப். 15) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் அம்மா திட்ட முகாம் திருநெல்வேலி வட்டம் ராமலிங்கனேரி, ராதாபுரம் வட்டம் கருங்குளம், அம்பாசமுத்திரம் வட்டம் பள்ளக்கால் பொதுக்குடி, நான்குனேரி வட்டம் கூந்தன்குளம், சேரன்மகாதேவி வட்டம்  வடக்குகாருக்குறிச்சி, பாளையங்கோட்டை வட்டம் பாளையங்கோட்டை பகுதி-1,  சங்கரன்கோவில் வட்டம் வன்னிக்கோனேந்தல் நரிக்குடி, திருவேங்கடம் வட்டம் பழங்கோட்டை களப்பாளன்குளம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இம்முகாமின்போது, வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, குடிநீர், சாலைவசதி தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com