தேமுதிகவின் 18ஆவது ஆண்டு கொடி அறிமுக விழா திருநெல்வேலி சிந்துபூந்துறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலர் ஏ.முகமது அலி தலைமை வகித்து கொடியேற்றினார். மேலும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தேமுதிக அறிமுக விழாவையொட்டி கொடி ஏற்றப்பட்டது.
மாவட்ட துணைச் செயலர்கள் கே.ஏ.எம்.சிவா, பழனிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், பாலகிருஷ்ணன், முத்துகுமார், பகுதிச் செயலர்கள் ஜலீஸ் ரகுமான், மாரிமுத்து, ஷேக், அந்தோணி, மானுர் ஒன்றியச் செயலர் சின்னத்தம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 5ஆவது வார்டு இசக்கி நன்றி கூறினார்.