திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் புத்தகக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியை கல்லூரி முதல்வர் (பொ) ஜெ. ஜாண்சன் ராஜேஸ்வர் தொடங்கிவைத்தார். 5 புத்தக விற்பனையாளர்கள் அரங்குகள் அமைத்திருந்தனர். 3500 தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அனைத்து துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கினர். ஏற்பாடுகளை கல்லூரியின் நூலகத் துறை பொறுப்பு அலுவலர் த. அண்ணா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.