திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறை சார்பில் உலக வானொலி தினம் கொண்டாடப்பட்டது.
தொடர்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் க.பாலசுப்பிரமணிய ராஜா வரவேற்றார். அகில இந்திய வானொலி நிலையத்தின் திருநெல்வேலி இயக்குநர் சுந்தர ஆவுடையப்பன் பேசுகையில்; வானொலியின் தோற்றம், வானொலி கடந்து வந்த பாதை, வானொலியின் பயன்பாடு மற்றும் பேரிடர் காலங்களில் வானொலியின் மகத்துவம் பற்றி கூறியதோடு, மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளித்தார். உதவிப் பேராசிரியர் ப.ராதா நன்றி கூறினார்.