நாளை விவசாயிகள்  குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்  வெள்ளிக்கிழமை (பிப்.15) நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்  வெள்ளிக்கிழமை (பிப்.15) நடைபெறுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  இம்மாதத்துக்கான திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை  ஆட்சியர் தலைமையில், மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. 
இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர். எனவே இக்கூட்டத்தில் இம் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com