"மின்கட்டணம் செலுத்தும் மையங்கள் 16, 17இல் செயல்படாது'

திருநெல்வேலி மண்டலத்தில் இம்மாதம் 16, 17ஆம் தேதிகளில் மின்கட்டணம் செலுத்தும் மையங்கள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மண்டலத்தில் இம்மாதம் 16, 17ஆம் தேதிகளில் மின்கட்டணம் செலுத்தும் மையங்கள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் வாரியத்தின் மேற்பார்வைப் பொறியாளர் பி. பையன் கிருஷ்ணராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  
திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள மின்கட்டண சர்வர் தகவல்களை புதிய பில்லிங் சர்வருக்கு இடம்பெயர்வு செய்வதற்கான பணி இம்மாதம் 16, 17இல் (சனி, ஞாயிறு) நடைபெறவுள்ளது. 
இந்த நாளில் திருநெல்வேலி மண்டலத்துக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் மின்கட்டணம் செலுத்தும் மையங்கள் செயல்படாது; ஆன்-லைன் முறையில் மின்கட்டணம் செலுத்தும் சேவையும் இயங்காது. ஆன்-லைன் சேவை 18ஆம் தேதி காலை 8 மணி முதல் செயல்படும். 16, 17இல் செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை 18ஆம் தேதி அபராதமின்றி செலுத்த வாய்ப்பளிக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com