திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பெண்களுக்கான கைவினைப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தொடங்கி வைத்தார். சிடி வைத்து விளக்கு தயாரித்தல், தெர்மாகோல் இலை குருவி சுவர் மாட்டி, கார்டு போர்டு சுவர் மாட்டி, சாய்பாபா மாலை உள்ளிட்ட கைவினைப் பொருள்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.