பாளை.யில் அரசு வழக்குரைஞர் மீது வழக்கு

திருமண ஆசை வார்த்தை கூறி, பெண் வழக்குரைஞரை ஏமாற்றியதாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த அரசு

திருமண ஆசை வார்த்தை கூறி, பெண் வழக்குரைஞரை ஏமாற்றியதாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த அரசு வழக்குரைஞர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாளையங்கோட்டை தியாகராஜநகர் இ.பி. காலனியை சேர்ந்தவர் சீதாலட்சுமி (36). திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார். இவர்,  திருநெல்வேலி நீதிமன்ற அரசு வழக்குரைஞர் ராஜேஸ்வரன் மீது மாநகர போலீஸ் துணை கமிஷனரிடம் ஒரு புகார் அளித்தார். அதில், கடந்த 2016ஆம் ஆண்டு சங்கச் செயலராக இருந்த ராஜேஸ்வரனுக்கும் தனக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும்,   திருமண ஆசைவார்த்தை கூறி தன்னை ஏமாற்றி விட்டதாகவும், ராஜேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில்,   பாளை. அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரிக்க துணை கமிஷனர் பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து, ராஜேஸ்வரன் மீது மகளிர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com