ஸ்மார்ட் கார்டு வடிவிலான ஓட்டுநர் உரிமங்கள் அளிப்பு

திருநெல்வேலியில் நவீன ஸ்மார்ட் கார்டு வடிவிலான ஓட்டுநர் உரிமங்களை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் புதன்கிழமை வழங்கினார். 

திருநெல்வேலியில் நவீன ஸ்மார்ட் கார்டு வடிவிலான ஓட்டுநர் உரிமங்களை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் புதன்கிழமை வழங்கினார். 
திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து துறையின் மூலம் நவீன ஸ்மார்ட் கார்டு வடிவிலான ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், நவீன ஸ்மார்ட் கார்டு வடிவிலான ஓட்டுநர் உரிமங்களை வழங்கி ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பேசியது:  
 சென்னை போக்குவரத்து ஆணையர் உத்தரவின்படி,  திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் கடந்த  26-ஆம் தேதி முதல் ஓட்டுநர் உரிமங்கள் புதுப்பித்தல், புதிய ஓட்டுநர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குதல் மற்றும் பதிவுத் சான்று வழங்குதல் போன்ற அனைத்தும் ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படுகிறது.  வாகன ஓட்டுநர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர். 
நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஷேக் முகம்மது, மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com