நெல்லை கம்பன் கழகத்தின் சார்பில் 465 ஆவது கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டை அருள்மிகு ராமசாமி கோயில் வளாகத்தில் உள்ள தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். அ.முருகேசன் இறைவணக்கம் பாடினார். மருத்துவர் இளங்கோவன் செல்லப்பா வரவேற்றார். சம்பாதி என்ற தலைப்பில் தமிழூரைச் சேர்ந்த முனைவர் போ.கார்த்திகாவும், பாலகாண்டம் என்ற தலைப்பில் கழகத் தலைவர் பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தியும் சொற்பொழிவாற்றினர்.
முனைவர் பாண்டியன், வெங்கடாசலபதி, மகராஜன், பேராச்சிமுத்து, நாகராஜன், ஜெயா, சுதா, லட்சுமி, கதிரேசன், செந்தில்குமார், மாயன், முருகன், கணபதி, சங்கரன், ராமநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பொன்.வேலுமயில் நன்றி கூறினார்.