திருநெல்வேலி நகரத்தில் மின்னல் அறக்கட்டளை சார்பில் 200 துப்புரவு பணியாளர்கள் குடும்பங்களுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மாநில பொதுச் செயலர் கே.முத்துபாண்டியன் தலைமை வகித்தார். உயர் நீதிமன்ற வழக்குரைஞர் அலிப் சலீம், தொழில்அதிபர் மெளலானா, கென்னடி ரத்த தான கழகத் தலைவர் ஹரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின்னல் அறக்கட்டளை நிறுவனர் எஸ்.மில்லத் இஸ்மாயில் இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார்.
திருநெல்வேலி நகரம் ஜாமியா செய்யது வரவேற்றார். பொறியாளர் தர்வேஸ் முகைதீன் என்ற கனி நன்றி கூறினார்.