பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தமிழ்துறை சார்பில் தமிழகம் - 2019 என்ற தலைப்பில் மாநில அளவிலான கலைப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டிக்கு, கல்லூரி முதல்வர் வி.பிரிட்டோ தலைமை வகித்துப் பேசினார். தமிழ்துறைத் தலைவர் பேராசிரியர் பிரான்சிஸ் சேவியர் வரவேற்றார். அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பேச்சு, கட்டுரை, கவிதை, விநாடி-வினா, பாவனை, நாடகம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இதில் திருச்செந்தூர் கோவிந்தமாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதலிடமும், பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரி இரண்டாவது இடமும் பெற்றன.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரிச் செயலர் அந்தோணி சாமி தலைமை வகித்தார். தொழிலதிபர் கே.எம்.ஏ.நிஜாம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
விழா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரவி ஜேசுராஜ் நன்றி கூறினார்.