திருநெல்வேலி குறிச்சி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலப்பாளையம் குறிச்சி டாஸ்மாக் கடை அருகே உள்ள முள்புதரில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக உளவுத்துறை பேலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன், உதவி ஆய்வாளர் காசிபாண்டியன் மற்றும் போலீஸார் குறிச்சி பகுதியில் சோதனை நடத்தினர்.
இதில் குறிச்சி டாஸ்மாக் மதுபானகடைக்கும் புறவழிச்சாலைக்கும் இடையே உள்ள முள்புதரில் சுமார் 1,500 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.