சத்தியவாகீஸ்வரர் கோயிலில் கணுத் திருவிழா

களக்காடு சத்தியவாகீஸ்வரர்-கோமதியம்பாள் திருக்கோயிலில் கணுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. 

களக்காடு சத்தியவாகீஸ்வரர்-கோமதியம்பாள் திருக்கோயிலில் கணுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. 
இக்கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் கணுத் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவை யொட்டி, சுவாமி-அம்பாள், சந்திரசேகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடைபெற்றன. இதைத் தொடர்ந்து தனித் தனி சப்பரங்களில் சுவாமி- அம்பாள் வீதியுலா நடைபெற்றது. 
ரத வீதிகளில் வலம் வந்த சுவாமி, அம்பாளுக்கு பக்தர்கள் தேங்காய்-பழம் உடைத்து வழிபட்டனர். இரவில் சுவாமி, அம்பாள், சந்திரசேகர் சுவாமிகளுக்கு களக்காடு - நாகர்கோவில் சாலையில் உள்ள பிள்ளைமடத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. அங்கிருந்து வியாழக்கிழமை அதிகாலை புறப்படும் சுவாமி, அம்பாள், சந்திரசேகர் சுவாமி சப்பரங்கள் வீதியுலா வந்து கோயிலை வந்தடைந்தது. திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com