கல்லிடைக்குறிச்சியில் விபத்து: மாற்றுத் திறனாளி சாவு

கல்லிடைக்குறிச்சியில் நேரிட்ட விபத்தில் மாற்றுத் திறனாளி இறந்தார்.

கல்லிடைக்குறிச்சியில் நேரிட்ட விபத்தில் மாற்றுத் திறனாளி இறந்தார்.
அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கோடாரங்குளம், தெற்குத் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் மாரிமுத்து (30).  மாற்றுத் திறனாளியான இவர், புதன்கிழமை மூன்று சக்கர மோட்டார் சைக்கிளில் சேரன்மகாதேவிக்குச் சென்றுகொண்டிருந்தாராம். கல்லிடைக்குறிச்சியை அடைந்தபோது அவரது மோட்டார் சைக்கிள் திடீரென தடுமாறி விழுந்ததாம். இதில், காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்தார்.
கல்லிடைக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் ஆதம்அலி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com