இட்டமொழி அருகேயுள்ள விஜய அச்சம்பாட்டில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
விஜய அச்சம்பாடு கிராமத்தில் எப்சிபா அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் மாலை நேர வகுப்புகளில் பயிலும் விஜய அச்சம்பாடு, மேல பண்டாரபுரம், கடையன்குளம், படப்பார்குளத்தை சேர்ந்த 88 மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில், பேனா, ரப்பர், பென்சில் பாக்ஸ், மெட்ரிக் பாக்ஸ், அட்டை போன்ற கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, மீனாட்சிநாதபுரம் சேகரத் தலைவர் டி.பால் ஏசுதாசன் தலைமை வகித்தார். அறக்கட்டளைத் தலைவர் வே.ஜெயராஜ் கல்வி உபகரணங்களை வழங்கினார். அறக்கட்டளைப் பொறுப்பாளர் பெனிட்டா நெல்சன் நன்றி கூறினார்.